மயக்குதே.. அந்த மாலை நேரத்து மழை..! மழையில் மழலையாய் நனைகிறாள் அவள்..! ஆவியை விடுகின்றன சோடிய விளக்குகள்..! "இவள எனக்கில்லை" என்றழுது...!! மஞ்சள் தூறல்கள் அவள்மேல் விழ.. இயற்கை தங்கக்கன்னம் இன்னும் பளபளக்கிறது..!! அசையாது ரசிக்கும் என்னை அனுமதித்துப் பின் மழையால் அடிக்கிறாள்.. அந்த மாயக்காரி..! இன்னும் தெளியாமல் நான்...!!