Tuesday, November 16, 2010

எப்படிச் சொன்னாலும் அழகாய்....

எனைக் கடுங்கோபம் கொள்ள வைத்த முதல் மழலை..!
என் மனதறிந்து திட்டித் தீர்க்க வைத்த என் முதல் பிழை..!
மறந்தும் மறக்க இயலாத மதுரமான என் முதல் கவிதை..!
இருந்தும் தூரமாய் இருக்கும் என் இதயத் திரை..! - இப்படி
எப்படிச் சொன்னாலும் அழகாய் இனிக்கும் நீ..! வாழிய..!

Tuesday, November 9, 2010

மழலையாய் நனைகிறாள் அவள்..!



மயக்குதே.. அந்த மாலை நேரத்து மழை..!
மழையில் மழலையாய் நனைகிறாள் அவள்..!
ஆவியை விடுகின்றன சோடிய விளக்குகள்..!
"இவள எனக்கில்லை" என்றழுது...!!
மஞ்சள் தூறல்கள் அவள்மேல் விழ..
இயற்கை தங்கக்கன்னம் இன்னும் பளபளக்கிறது..!!
அசையாது ரசிக்கும் என்னை அனுமதித்துப் பின்
மழையால் அடிக்கிறாள்.. அந்த மாயக்காரி..!
இன்னும் தெளியாமல் நான்...!!