Sunday, July 19, 2009

மழலையாய் நான்..!

விளையாடிய மழலையை கண்டதும் எனை அறியாது விளைந்த புன்னகையை விளக்க தெரியாத மழலையாய் நான்..!

இறக்கையில் சுமைகளா..?

பறக்க யத்தனித்த பின் 
இறக்கையில் சுமைகளா..?
உதறித் தள்ளடா நீ - இனி
உயரப் பறப்போம் வா..!

Monday, July 13, 2009

சாதிக்கப் பிறந்தவன் நான்..!

சாதிக்கப் பிறந்தவன் நான்..!
உனது எல்லைக்கோடுகள்
எனது திறந்த மனவெளியில்
மணல்வரிகளாய் சரிந்தழிதல் காண்..!
நீ இட்ட தடைச்சுவர்கள்
எனது மூச்சுக்காற்றில்
வழிகளாய் பரிணமித்தல் காண்..!

நினைவுகளில்...

விடியலுக்கு முன்னே விடிகின்றன என் இரவுகள்..!!

நினைவுகளில் நீ விதைத்துச் சென்ற சூரியன்களால்....

ஒரு புள்ளி மட்டும்..

சிறு வட்டமிட்டாய் மணலில், "இவ்விடம் எனது" என்றாய்.
ஒரு புள்ளி மட்டும் வைத்தேன் நான்! - இவ்வுலகமே எனதென்றேன்..!
"அடே முட்டாள்" - என்றாய் நீ!. அமைதியாய் புன்னகைத்தேன் நான்!
அதற்குப்பின் நீயும் நானும் விளையாடியதாய் எனக்கு ஞாபகம் இல்லை.