Thursday, September 3, 2009

மகிழ்ந்த சில பொழுதுகள்..! -1

கால்நூற்றாண்டுகள் கடந்திருந்தது..!

அவள் "இது வேண்டும்" என்றோ

"மகிழ்ந்தேன்" என்றோ கூறக் கேட்டதில்லை.!

இன்று முதன்முதலாய் அவளுக்கென்றொரு பரிசளித்தேன்..!

பெற்றுக்கொண்டாள்..!

பெருமிதமாய் பார்த்தாள்..!

கண்கள் மெல்ல ததும்பின..!

உதடுகள் கொஞ்சம் துடித்தன..!

நெஞ்சோடு அணைத்தாள்..!

நெற்றியில் முத்தமிட்டாள் உச்சி முகர்ந்து.!

நெடுநேரமாய் மீண்டும் மீண்டும் வந்து போயின அச்சிறு மணித்துளிகள்..!

அவள் "மகிழ்ந்தேன்" எனக் கூறும் வார்த்தைகளுக்கு முன்னே

மற்றெல்லா காதலும் எச்சமாய் பட்டது தாயின் முன்னே..!

மழலையாய் மீண்டும் மனதுக்குள் உச்சரித்தேன் "அம்மா"..!

அப்பாவாய் எனக்கு அகவை ஒன்று..!

முதன் முதலாய் பூமியில் தடம் பதித்திருந்தாள்..!

நானும் முதன் முதலாய் புதுப்பட்டம் பெற்றேன்..!

சிற்சில தடைகள் கடந்து வந்தாள்..!

சிறகுகள் கட்டிப்பறந்தேன் ஒவ்வொரு முறையும்..!

முதல் மொழி.. முதல் சைகை..முதல் பிறழல்..முதல் தவழல்..

அத்தனைக்கும் உள்ளூர மகிழ்ந்திருந்தேன்..! - இன்று

முதல் நடையோடு முதலாம் ஆண்டில் தடம்

பதிக்கும் எனதருமை மகளே...நீ வாழிய பல்லாண்டு..!!

விடியலாய் வருவாயா..!?!

ஏதோ காரணங்களுக்காக நடுநிசியில் விழிக்கிறேன்..!

எஞ்சிய இரவெலாம் எண்ணங்களில் நீ நிறைகிறாய்..!

உனக்கான என் காதல் இருளிலேயே உழல்வதுபோல்

யாருமறியாமல் நகர்கின்றன அப்பொழுதுகள்...!

விடியலாய் வருவாயா நீ!

கதறியது வானம்..!

முகம் கறுத்து..

ஈனஸ்வரத்தில் இடித்து..

மழைக்கண்ணீர் வடித்து..

மண்ணைக் கட்டிக்கொண்டு..

மாரடித்துக் கதறியது வானம்..!

இன்னொரு நல்லவனுக்கு..

இன்னுமொரு முறை..

துன்பம் நேர்ந்திருக்கலாம்..!