Sunday, February 21, 2010

நிலவில் நீரும் உண்டு..!

"பிறைநிலவு உருகுகிறது..!"

"நிலவில் நீரும் உண்டு..!"

"அவள் நெற்றியில் வியர்வைத்துளிகள்..!"

- தமிழில் இது "ஒருபொருட்பன்மொழி".

Friday, February 19, 2010

நோகடித்தேனா?

"நோகடித்தேனா? நோகடித்தேனா?" என்று அடிக்கடி கேட்கிறாள்..!
அவள் தரும் வலியெல்லாம் சுகமாய் இருக்கும்போது...
"ஆம்" என்று எப்படிச் சொல்வேன்...?! சொல்லுங்கள்..!?!

ஒருத்தி வருவாள்..!

ஒருத்தி வருவாள்..! எனை புரட்டிப் போட்டு 
அத்தனைக்கும் புது அர்த்தம் தருவாள்..!
எனைத்தேடித் தோற்று அவளிடம் சரணடைவேன்..!

Tuesday, February 16, 2010

இன்னும் காதல் வயப்பட்டிருக்கிறேன்...!

எத்தனை முறை மறுத்தும்...
அடிக்கடி கண்முன் வந்து..எனை
நானே அறியாமல் புன்னகைக்க 
வைக்கும் அவள் முகம் சொன்னது..
நான் இன்னும் காதல் வயப்பட்டிருக்கிறேன் என்று..!

விழியுளியாலே...!

கல்இதயம் கொண்டிருந்தேன் யான்..!

விழிவழி வந்தாள் விழியுளி கொண்டு..

ஒலிஒளி எழவே அவளுறு செய்தாள்..!

இனிஇனி என்செய்வேன் யான்

உனை மறவென்றால்... சொல்..!

தோற்றலும் சுகமடி...!

படுசுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டிருப்போம்..!

வேண்டுமென்றே தோற்பேன்..! உணர்ந்து புன்னகைப்பாய்..!

கள்ளப்பார்வை பார்ப்பாய்..! அத்தனையும் கலைத்துவிட்டு..

"ஏனடா" என்றொரு பார்வை பார்ப்பாய்..! - "உன்னிடத்தில்

தோற்றலும் சுகமடி" என்பேன் பார்வையால்...

புன்னகைத்து அருகே வந்து.. பூரித்து தோள்சாய்வாய்..!

Tuesday, February 2, 2010

நானும் மழலையாவேன்..!

சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவாய்..!

பதிலுக்கு நானும் மழலையாவேன்..! - ஆடி 

முடித்ததும் ஆழமாய் ஒரு பார்வை..! - அது

சிறக்க உள்ளார்ந்த ஒரு புன்னகை..!

தந்திடும் கணத்தினில் தெரியுதடி 

உன் கண்களில் நம் சிநேகம்..!