"பிறைநிலவு உருகுகிறது..!"
"நிலவில் நீரும் உண்டு..!"
"அவள் நெற்றியில் வியர்வைத்துளிகள்..!"
- தமிழில் இது "ஒருபொருட்பன்மொழி".
"பிறைநிலவு உருகுகிறது..!"
"நிலவில் நீரும் உண்டு..!"
"அவள் நெற்றியில் வியர்வைத்துளிகள்..!"
- தமிழில் இது "ஒருபொருட்பன்மொழி".
கல்இதயம் கொண்டிருந்தேன் யான்..!
விழிவழி வந்தாள் விழியுளி கொண்டு..
ஒலிஒளி எழவே அவளுறு செய்தாள்..!
இனிஇனி என்செய்வேன் யான்
உனை மறவென்றால்... சொல்..!
படுசுவாரஸ்யமாக விளையாடிக்கொண்டிருப்போம்..!
வேண்டுமென்றே தோற்பேன்..! உணர்ந்து புன்னகைப்பாய்..!
கள்ளப்பார்வை பார்ப்பாய்..! அத்தனையும் கலைத்துவிட்டு..
"ஏனடா" என்றொரு பார்வை பார்ப்பாய்..! - "உன்னிடத்தில்
தோற்றலும் சுகமடி" என்பேன் பார்வையால்...
புன்னகைத்து அருகே வந்து.. பூரித்து தோள்சாய்வாய்..!
சிறுபிள்ளைத்தனமாய் விளையாடுவாய்..!
பதிலுக்கு நானும் மழலையாவேன்..! - ஆடி
முடித்ததும் ஆழமாய் ஒரு பார்வை..! - அது
சிறக்க உள்ளார்ந்த ஒரு புன்னகை..!
தந்திடும் கணத்தினில் தெரியுதடி
உன் கண்களில் நம் சிநேகம்..!