Tuesday, May 24, 2011

மீண்டும் வருமா?!

மெல்ல வருடிச்செல்லும் காற்றாய் 
சில்லென நகர்கின்றன சில பொழுதுகள்..!
மீண்டும் வருமா என்ற ஏக்கத்தை தூவிச்சென்று..!

அடுத்து வரும் இன்னொரு வசந்தத்தையும் 
அதனூடே தெளித்துச்செல்வதாலோ என்னவோ..
இயற்கையை இன்னுமதிகமாய் பிடிக்கிறது.. எனக்கு!

Thursday, May 12, 2011

அட! இது என்ன விந்தை?

அட! இது என்ன விந்தை?!

அத்தனையும் அழகாய்த் தெரிகிறதே?!

எல்லாவற்றிலும் என்னவள் பிம்பத்தை

செருகிச் சென்றது யாரோ?!

 

Wednesday, May 4, 2011

ஒரு வெறுமை..!

எல்லாம் இருந்தாலும்... 
என்னதான் வானத்தில் பறந்தாலும்..
என்னதான் சாதனை புரிந்தாலும்..
"நீ இல்லையே" என நினைக்கும் தருணங்கள் சொல்கின்றன...
யாரும் அறியாத ... ஏதோ ஓர் ஊனத்தை..
என்றும் நிரம்பாத ஒரு வெறுமையை..