"அமுதம் வீழுதோ!?! அமிலம் வீழுதோ?!"
என இனியொரு இனம் அழுவதோ?!
மதிக்கப் பழகடா மாதவ இயற்கையை..!!
நீ வராத நாட்கள் அஸ்தமிப்பதில்லை
எச்சமாய் தொக்கி நிற்கின்றன..!
ஒளியாய் பட்டதெல்லாம் வெறுமையாய்..
இருளாய் பட்டதெல்லாம் பாலையாய்..
உணர்வுகள் அத்தனையும் தகிப்பும் தவிப்புமாய்..
வார்த்தைகளில் அகப்படாத வலியின் கொடூரமாய்..
வதந்தியிலாவது உன்னோடு சேர்த்து பேசப்பட மாட்டேனா? - என ஏக்கம்..!
எத்தனை பேர் சொன்னாலும் உணர்கையில் புதுமையாய்.. இந்த வலி!
வானம் வடித்த கண்ணீரில்
வயிறு நிரப்புதாம் பூமி..!
வடிந்த நீரை வாரி இறைக்க..
வியர்வையைத் தின்று
வேட்டியானதாம் கோவணம்..!
"ஈர மணலில் சித்திரம் ஆயிரம்"
செதுக்கிய மழலையில்…
அழித்த அலையில்…
அலையுடன் கோபித்த அழகில்...
அத்தனையிலும் நீ!