Tuesday, November 27, 2007

இதழ்கள் தொட்டபின்னே !

நின் இதழ்கள் தொட்டபின்னே
நீரும் சுவை கொண்டதடி பெண்ணே!
பழச்சாறும் சுவை கெட்டதடி கண்ணே!

உன் ஒற்றை முத்தத்தில்!

நின்னை படைக்கையில் பிரம்மன்
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!

Thursday, November 22, 2007

சிநேகம் தெரியுதடி..!

தூரத்தில் இருந்தாலும், நீ தடுமாறும்போது
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!

பொய்-முத்தம்..!




பொய் சொன்னால் போஜனம் கிடைக்காதாம்!
எவன் சொன்னது? சுத்தப் பொய்! - சிறு


பொய் சொன்னேன் உன்முத்தம் கிடைத்தது!
இதழ்ரசம் அருந்தினால் இவையெலாம் புரியும்!

அவள் துப்பட்டாவின் ஸ்பரிசம்!

எதிர்பாராமல் கொஞ்சிய நின்
துப்பட்டாவின் குஞ்சங்கள்!

உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!

தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!

Wednesday, November 21, 2007

பறக்க எதற்கு இறக்கை?


பறக்க எதற்கு இறக்கை?
என்னவளை கடக்க முயலடா! போதும்.

நிழலடி நான் உனக்கு!


உனை தொடரல் வரம் எனக்கு!
எனை மிதித்தல் சுகம் உனக்கு!
நிழலடி நான் உனக்கு!

Tuesday, November 20, 2007

தொடரலும் சுகமோ..?!



எத்தனை வடிவம் உனக்கு! எண்களாய் நீ!
உனைச்சுற்றும் ஒரே வடிவம் எனக்கு! முள்ளாய்!



நீதொட பரிணமித்தேன் இத்தனை உருவும்!
நீ சொல்லிய பதிலில் துள்ளித் தொட்டேன்! ஒரு நொடியில்!