Wednesday, July 27, 2011

இதயங்கொத்தி..!

அவள் வெறுத்த அத்தனையும்.. என்

அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!

நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..

"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!

உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?

உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!

அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!

இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!

வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..

ஈரமோ, திரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!

Saturday, July 23, 2011

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...!

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...! உனைத்தான் 
தேடிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியாமலே..!
அருகிலிருந்து சிரிக்கிறாய் - அத்தனை முறையும்..!

ஏன் அடித்துச் சென்றாய்?

ஏன் அடித்துச் சென்றாய்? 
விழியாலோ? சிறு மொழியாலோ?
விண்ணில் பறக்க வைத்த விழிப்பார்வை!
மண்ணில் புதைத்துச் சென்ற ஒருமொழி!
ஏதென்னை அடித்துச் சென்றது?!

Friday, July 15, 2011

அழைக்கவா?

ஒருமுறை அழைக்கலாம் எனத் தோன்றுகிறது! - அழைத்தால் 
நீ அழக்கூட செய்யலாம் எனத் தோன்றுகிறது! - அழுது 
எனை அணைத்துக் கொள்வாய் எனத் தோன்றுகிறது! 
அந்த அணைப்போடு... 
அடுத்த உலகத்துக்குக் கூட நடந்தே போகவும் தயார்..!
..
"அழைக்கவா?!"....... நினைக்கையிலேயே
சில துளிகள்.. தெறித்து விழுந்தன.. 
நெஞ்சை நனைத்தன.. விழிகளில் ஈரம்..!