Sunday, March 21, 2010

இயற்கைக்கு நிகராய்?

ஒவ்வொரு நொடியும் சுகத்தை சுமந்து சிரிக்கும் 
இயற்கைக்கு நிகராய் இன்னொன்று உளதோ?!
இருந்தால் சொல்லுங்கள்..!
இந்த கணமே இயற்கையெய்திடத்  தயார்..!

"என்ன மாயம் செய்தாயடி?!"

ஓரப்பார்வை பார்த்தாய்..!
உணர்வுகளோடு விளையாடினாய்..!
ஹார்மோன்களில் நீச்சலடித்தாய்..!
கவிதையாய் பேசினாய்..!
கடைசியில் "ஒன்றுமில்லை" என்கிறாய்..!
இருந்தும் உன் மீது கோபம்கூட
"வரமாட்டேன்" என்று எனக்கு எதிரியாகிறது..!
"என்ன மாயம் செய்தாயடி?!"

எனது கடற்பயணங்களில்...

கடும் புயலும் கரடு முரடான சூழலும் கொண்ட 
எனது கடற்பயணங்களில்..... 
என்னோடு பயணிக்க யத்தனித்தாய்...! - உனை 
பாதுகாப்பான கரையிலேயே விட்டுவிட்டு விலகுகிறேன்..! 
"வலி எனக்கு வாடிக்கை"..!

Sunday, March 14, 2010

எனை நிராகரித்தவளுக்கு...

என்னை நிராகரித்த உன் காதலுக்கு நன்றி..!
உனையன்றி மண்ணில் வேறெவளும் இந்த 
மகத்தான உணர்வுகளைத் தந்திருக்க முடியாது..!

உனை வருத்தினேனோ?

"உனை வருத்தினேனோ?" என எண்ணும்
ஒவ்வொரு நொடியும்.. 
யுகமென நீளும்..!
முள்ளென பாயும்..! 
"உள்ளேனோ?" என எனை மாய்க்கும்..! 
மன்னிப்பாயா? மண்வந்த தேவதையே..!?!

வெயில் கூட அழகாய்...

வெயில் கூட அழகாய்த் தெரிகிறது..!
கதிரெலாம் மழையெனச் சரிகிறது..!
வெளிச்சம் என்மேல் மலராய் விழுகிறது..!
அனிச்சம் அவள் கடந்து செல்லும் கணங்களில்...