Thursday, April 19, 2007

புல்லாங்குழல்..!!


வாயுளி கொண்டு வண்டது துளையிட
வழியிடை ரீங்கார உளறலதில் உறைந்திட
வேயுழல் தென்றலதில் வெட்கிப் புகுந்திட
பாய்ந்து வந்ததுவே நற்கானம். - அழகு மூங்கில்

புல்லாங்குழல் தான் இதன் புதுப்பரிமாணம்.

Thursday, April 5, 2007

கூடல்...!!

நம்கூடலில் விளைந்த...
மங்கல மணம்,
குளிர்வித்தது பூமியை...
மழையொடு மண்..!!

Monday, April 2, 2007

நெடுநாள் கனவு..!!

கவிஞனாக வேண்டும்..
நெடுநாள் கனவு..!!
நனவானது உன்னால்,
நீ வேண்டும் எனக்கு..
காதலிக்க அல்ல,
சகியே! மறுக்கவாவது..!!

எண்பதுகளில்...இது எதார்த்தம்...!

பிறந்த முதல்நாள் பிள்ளை அழுதது
தாய் சிரித்தாள் தழுவிக்கொண்டு,
நாட்கள் நகர்ந்தன உறவுகள் வினவின
பெண்ணை பெற்றாயோ இம்முறையும்?
வந்தோர் சென்றனர், தாய் அழுதாள்
குழந்தை சிரித்தது....கள்ளிப்பாலருந்தி...!!