Saturday, May 30, 2009

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில்..

உன் நினைவுகள் அடர்ந்த காடுகளில் - "நான்"

நகரம் மகரமாக துள்ளித் திரிகிறேன் - பின்

னகரம் மகரமாகாமல் - அயர்ந்து சரிகிறேன்.

னகரம் னகரமாகவே....! கண்களும் இதயமும்

நீர் ததும்பியும் பாலையாய் - கானல்

நீர் ததும்பும் பாலையாய்..! கானல்

நீர் ததும்பும் பாலையில் மகரமாய் "நான்"!

இயங்காத கடிகாரம்..!

இயங்காத கடிகாரம் - நேரத்தை நினைவுபடுத்தியது..!

என் வாழ்வின் தருணங்களில்

நீ வந்து போன நிமிடங்களை மட்டும்

மீண்டும் மீண்டும் சுற்றி வந்து..

மோதிப்பார்ப்போம் வா..!

சாதிக்கப் பிறந்தவர்கள் நாம்..!

சரிந்தே அமர்வது எவன் வழக்கம்..!?

மோதிப்பார்ப்போம் வா - இந்த

பூமிப்பந்தும் கையடக்கம்..!

மடமை-2

யாருடனோ பேசிவிட்டு

புன்னகையோடு திரும்பினாள் -

எதேச்சையாய் எதிர்பட்டான் இவன்..!

சிரித்தாள் தனைப்பார்த்தே என்று

சில நாட்கள் மகிழ்வாய் நகரும்

இவனுக்கு…!!! அட மடமையே..!

அட..!

சாலையோரம் நடந்து செல்கையில்

ஆர்வமாய் விளையாடும் குழந்தைகள்..!

சட்டென ஏதோ சிறு கருத்து வேறுபாடு எழ

ஒவ்வொரு பிள்ளையும் ஒருவிதமாய்

சுவாரஸ்யமாய் விளக்கம் கொடுத்துக்கொண்டனர்..!

உண்மையறிந்தும் புன்னகைத்து நகர்ந்தேன்.

எனைக்கண்ட ஒரு குழந்தை ஒரு குறுஞ்சிரிப்பு செய்தான்..!

சுவாரஸ்யமாய் வாழ்க்கை..! அட இது சுகமடா..!

உன்னருகில்

நா குழறியது..!

இதயம் படபடத்தது..!

கண்கள் மாறி மாறி இருண்டும் பிரகாசித்தும்..

நேரம் நிற்கிறதா? இல்லை நகர்கிறதா

எனப் புரியவில்லை..! இத்தனையும்

பசி மயக்கமல்ல, ஏதோ பிணியுமல்ல..

உன்னருகில் நான்நெருங்க..

என்னில் வந்து போன அறிகுறிகள்!

ஏக்கம்

ஏக்கத்தோடுதான் கழிகின்றன பொழுதுகள்..!

உன்னோடு பகிரப்படாத உணவு

இன்னுமொரு முறை உண்ணப்படுகிறது..!

எந்திரமாய் உடல் உட்கொள்ள….

உண்ணாத மனம் - ஏக்கத்தோடு..!

மடமை

இன்று "இந்த கிழமை" என்று சொல்வது போன்ற அப்பட்டமான வாக்கியங்கள் மட்டும் தான் பரிமாறிக்கொள்கிறேன் உன்னோடு..! - இருந்தும் ஏதோ தத்துவம் சொன்னதாய் குதிக்குதென் இதயம்..!

இந்த மடமைக்கு மருந்துண்டா சொல்?!

நமக்குள்ளான நெருக்கம்!

விளக்குகள் அணைக்கப்பட்டன..!

என்னருகே நீ..! - கொஞ்சமாய்

மஞ்சளாய் தூரத்து வெளிச்சம்..!

நாம் விழித்து விதவிதமாய் கதைக்க..

உறங்கிய நேரம் விடிந்து விழிக்கையில்..

உணர்கிறோம் நமக்குள்ளான நெருக்கம்!

சொர்க்கம்

மழை விட்ட நேரம்..!

மரங்கள் குளித்து மண்ணைக் குளிப்பாட்டிய தருணம்..!

வேயெல்லாம் நனைந்து காற்றைக் குளிர்விக்கும் காடு..!

என்தோளில் நீ சாய..சலனமில்லா நடையில் நாம்..!

சொர்க்கம் என்று இதைத்தான் சொல்வார்களோ?!

மழலை

கண்ட ஒரு மழலை முகம்

கவிழ தந்த ஒரு குறுஞ்சிரிப்பும்

குறுகுறு கள்ளப் பார்வையும்

காண்கையில் அறிகிறேன்

அழகுடை இவ்வுலகை..!