Friday, August 24, 2012
Saturday, January 28, 2012
கைகோர்த்தேன் ஒருநாள்..!
சிலநொடிகள் பரபரப்பாய்..
சிநேகிதம் வெதுவெதுப்பாய்..
கரங்களில் மென்மையும்..
பார்வையில் எதிர்பார்ப்புமாய்..
கைகோர்த்தேன் ஒருநாள்..!
முகம்பார்க்க முயல்கையில்..
ஆர்வத்தின் அதீதத்தால்..
உணர்வினை உயிர்ப்பித்து..
கனவதைக் கலைத்தோடினாள்..!
கவிதையே! யாரடி நீ!
Tuesday, December 13, 2011
சுட்ட காதல்..!
Thursday, December 1, 2011
நானும் மழலையாய்..!
இதய அறைகளில் இன்னும் இருந்துகொண்டு..
அடிக்கடி புன்னகை.. அரும்பச் செய்கிறாய்..!
துடிக்கும் இதயத்தை கெட்டியாய் பிடித்து..
வலிக்கிறதா என்று மழலையாய் கேட்கிறாய்..!
உள்ளூரும் சுகமும்.. உயிர் கரையும் வலியும்..
தந்த நீ எதிரியா? நண்பியா?
இதுவரை விளங்காது.. நானும் மழலையாய்..!
Sunday, November 13, 2011
நெஞ்சக்கடல்..!
Thursday, August 25, 2011
வீழ்த்திப் பார்..!
Wednesday, July 27, 2011
இதயங்கொத்தி..!
அவள் வெறுத்த அத்தனையும்.. என்
அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!
நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..
"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!
உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?
உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!
அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!
இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!
வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..
ஈரமோ, உதிரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!