Monday, June 21, 2010
கனிவாய்த்தான் புன்னகைக்கிறாள்..!
Sunday, June 13, 2010
மழலையாய் நானும்.!
ஒரு மழலையோடு விளையாடிக் கொண்டே மழலையாய் நானும்.!
இப்படி இருந்தால்...
வாழ்க்கை சுவாரஸ்யமாய் இல்லாமல் வேறெப்படி இருக்கும்?
வாடா பறக்கலாம்..!
வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!
மலையெனப் பட்டதெல்லாம் மடுவென்றாக்கலாம்..!
மலையோடு மடுக்களும் வென்று நமதாக்கலாம்..!
வன்சிறகு விரியடா... எனக்கு வான்சகா ஆகடா..!
வாடா பறக்கலாம்..! வானம் அளக்கலாம்..!
மௌனமே..!
மௌனமே..! எனை கொள்ளை கொண்ட மௌனமே..!
மயங்கினேன் உன் மௌனத்துக்கும்...முகபாவங்களுக்கும்..!
வார்த்தைகளுக்கடங்கா வனப்பு..! - உன்வார்த்தைகளுக்கும்
வார்த்தைகள் அல்லாதவைக்கும்.... வாழிய அத்தனையும்..!
எனக்காக அழுத...
எனக்காக அழுத முதற்பெண்ணும் நீதான்..!
எனை அழவைத்த முதற்பெண்ணும் நீதான்..!
உனக்காக என்செய்வேன் என விளங்காமல் நான்..!
உளமாற மீண்டும் "நன்றிகளும் வாழ்த்துகளும்"..!
இரவலனாக்கியும் சாதுவாய்..!
எனை இரவலனாக்கிய உன் காதலுக்கு நன்றி..! - என்தரம்
சாய்த்த உனை சாடவும் மனமில்லாத சாதுவாய் நான்..!