Friday, October 29, 2010

சிவ-பிரம்மம் நீ..!

என் கனவுகளுக்கு மட்டுமல்ல... 
என் கவிதைகளுக்கும் பிரம்மா நீதான்..!
பின் கலைத்தெறியும் சிவனும் நீதான்..!

Thursday, October 28, 2010

தினம் தினம் போர்..!

தினம் தினம் போர்..! தினம் உயிர்ச்சேதம்..! 
ஒருநாள் அவள் நண்பனைக் கொல்கிறேன்..! 
மறுநாள் அவள் எதிரியைக் கொல்கிறேன்..! 
தினம் தினம் போர்..! எனக்குள்ளே..!

சூரியனடி நீ எனக்கு..

சூரியனடி நீ எனக்கு..! - நீ 
புன்னகைத்த கதிர்களால் என் 
புதுவிடியல் பிறக்குதடி..! - நீ 
கண்சிமிட்டும் பொழுதெலாம் 
கருமேகம் கடக்குதடி..!

யார்மேல் பழியிடுவது?!

யாரைக்குறை சொல்லுவது?
ஆழமான உள்ளத்தை உள்வைத்து 
வஞ்சித்த வனப்பான கண்களையா?
சிரிக்க சிரிக்க விழுந்து காட்டி
விழ வைத்த கன்னக்குழிகளையா?
உன்னில் எனைத்தள்ளி வீழ்த்தியதற்கு
யார்மேல் பழியிடுவது?!

Wednesday, October 20, 2010

அழகுத்திணை..!

"அழகு" என்று புதிதாய் ஒரு அகத்திணை..!
அவளும் அவள் நிமித்தமான அத்தனையும் .. அத்திணையில்...!!