Tuesday, December 13, 2011

சுட்ட காதல்..!

விட்டிலைப் பார்த்து விமர்சித்தேன் சிலகாலம்..!
விழுந்தது தீயிலென்றறிந்தும் விரும்புவானேனென்று?!
வியப்பாய் சிரித்தது எனையெள்ளி நகையாடி..!
உனைச்சுட்ட காதல் தனிரகமோ என்றே..!!

Thursday, December 1, 2011

நானும் மழலையாய்..!

இதய அறைகளில் இன்னும் இருந்துகொண்டு..

அடிக்கடி புன்னகை.. அரும்பச் செய்கிறாய்..!

துடிக்கும் இதயத்தை கெட்டியாய் பிடித்து..

வலிக்கிறதா என்று மழலையாய் கேட்கிறாய்..!

உள்ளூரும் சுகமும்.. உயிர் கரையும் வலியும்..

தந்த நீ எதிரியா? நண்பியா? 

இதுவரை விளங்காது.. நானும் மழலையாய்..!

Sunday, November 13, 2011

நெஞ்சக்கடல்..!

நீ தந்த வலிகள்.. அடிக்கடி வந்து போகும் அலைகள்..!
நிலவே உன் தீவிரம் கொஞ்சம் குறைப்பாயா? - என் 
நெஞ்சக்கடல் கொஞ்சம் அமைதியாகட்டும்..!

Thursday, August 25, 2011

வீழ்த்திப் பார்..!

புதைத்தோ வீழ்த்தியோ - எனை 
சிதைத்தோ சிதையிலிட்டோ
எத்தனை வழிகளுண்டோ 
அத்தனையும் செய்தே பார்!!

விதைத்தேனோ எனநீ விளிக்க
என்விடியலைப் படைப்பேன்! காண்!

Wednesday, July 27, 2011

இதயங்கொத்தி..!

அவள் வெறுத்த அத்தனையும்.. என்

அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!

நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..

"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!

உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?

உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!

அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!

இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!

வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..

ஈரமோ, திரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!

Saturday, July 23, 2011

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...!

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...! உனைத்தான் 
தேடிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியாமலே..!
அருகிலிருந்து சிரிக்கிறாய் - அத்தனை முறையும்..!

ஏன் அடித்துச் சென்றாய்?

ஏன் அடித்துச் சென்றாய்? 
விழியாலோ? சிறு மொழியாலோ?
விண்ணில் பறக்க வைத்த விழிப்பார்வை!
மண்ணில் புதைத்துச் சென்ற ஒருமொழி!
ஏதென்னை அடித்துச் சென்றது?!

Friday, July 15, 2011

அழைக்கவா?

ஒருமுறை அழைக்கலாம் எனத் தோன்றுகிறது! - அழைத்தால் 
நீ அழக்கூட செய்யலாம் எனத் தோன்றுகிறது! - அழுது 
எனை அணைத்துக் கொள்வாய் எனத் தோன்றுகிறது! 
அந்த அணைப்போடு... 
அடுத்த உலகத்துக்குக் கூட நடந்தே போகவும் தயார்..!
..
"அழைக்கவா?!"....... நினைக்கையிலேயே
சில துளிகள்.. தெறித்து விழுந்தன.. 
நெஞ்சை நனைத்தன.. விழிகளில் ஈரம்..!

Tuesday, June 21, 2011

சதிகாரி நீ!

சண்டையிட்டாலும்.. என் சரித்திரத்தில் சில பக்கங்களை..
சர்க்கரையால் கிறுக்கிவிட்டுப் போன சதிகாரி நீ!
உன் நினைவுகளில் வாழ்கிறேனோ?! வாடுகிறேனோ?!
இனிக்கத்தான் செய்கிறது.. இப்போது நினைக்கையிலும்..!

Thursday, June 9, 2011

நினைவழித்தல்..!

உன் நினைவுகளை அழிக்க முயலும்..
யாதொரு செயலிலும்.. யாதொரு நொடியிலும்..
படபடவென பதறும் இதயம் சொல்லுதடி..
உனக்கான என் ஆத்மார்த்தமான சிநேகத்தை..!!

ஓர் அதீதம்!

ஏதோ பெண்ணில் வரும் மயக்க மென்றெண்ணி..

இன்னும் சில பெண்களிடம் பழகிப் பார்த்தேன்.!

பேசிய சில நிமிடங்களிலேயே புரிந்ததடி - இது 

உன்னில் மட்டும் மயங்கும் ஓர் அதீதமென்று..!

Wednesday, June 8, 2011

தேடலின் விந்தை..!

உனைத் தேடுவதாலே தொலைகிறேன்..!

தொலைவதாலே எனைத் தேடுகிறேன்..!

தொலைத்தேனா..?! தொலைக்கப்பட்டேனா?!

கண்டதும்.. அல்லது கண்டெடுக்கப்பட்டதும்..

கண்டிப்பாக சொல்கிறேன்..!

கணிக்க.. கடினமாய்...

காலநிலையைப் போலவே கணிக்க..

கடினமாய் இருப்பதாலோ என்னவோ?!

இயற்கையோடு.. என்னவளையும்…

அதிகமாய் பிடிக்கிறது எனக்கு..!!


Tuesday, May 24, 2011

மீண்டும் வருமா?!

மெல்ல வருடிச்செல்லும் காற்றாய் 
சில்லென நகர்கின்றன சில பொழுதுகள்..!
மீண்டும் வருமா என்ற ஏக்கத்தை தூவிச்சென்று..!

அடுத்து வரும் இன்னொரு வசந்தத்தையும் 
அதனூடே தெளித்துச்செல்வதாலோ என்னவோ..
இயற்கையை இன்னுமதிகமாய் பிடிக்கிறது.. எனக்கு!

Thursday, May 12, 2011

அட! இது என்ன விந்தை?

அட! இது என்ன விந்தை?!

அத்தனையும் அழகாய்த் தெரிகிறதே?!

எல்லாவற்றிலும் என்னவள் பிம்பத்தை

செருகிச் சென்றது யாரோ?!

 

Wednesday, May 4, 2011

ஒரு வெறுமை..!

எல்லாம் இருந்தாலும்... 
என்னதான் வானத்தில் பறந்தாலும்..
என்னதான் சாதனை புரிந்தாலும்..
"நீ இல்லையே" என நினைக்கும் தருணங்கள் சொல்கின்றன...
யாரும் அறியாத ... ஏதோ ஓர் ஊனத்தை..
என்றும் நிரம்பாத ஒரு வெறுமையை..

Friday, April 1, 2011

நீராய் நான்..!

நீராய் நான்..!
நெஞ்சினிக்க தாகம் தணிப்பேன்..!
நெருப்பதனின் தகிப்பும் அணைப்பேன்..!
பிஞ்சு விரலில் கிழிபடவும் செய்வேன்..!
பேய்ப்பாறையின் திமிரும் அழிப்பேன்..!
நீராய் நான்..! நிதானமாய் நான்..!

Wednesday, March 9, 2011

கெஞ்சலாய்...

கெஞ்சலாய் கேட்டாள்..! 
அந்தத் தொனியில் உணர்கிறேன்..!
"அவளுக்காக விட்டுக்கொடுப்பதுவும் சுகம்.!"

Wednesday, February 23, 2011

பிழையா நீ...!

பிழையா நீ...! என் உயிர் குடிக்க.. 
நானே இழைத்த பெரும்பிழையா நீ..!

Friday, February 18, 2011

நீ சொல்லாததை...

நீ சொல்லாததையும்...
சொல்லியதாய் எண்ணி...
எதற்கும் ஏங்காதவன்போல்..
வாழ்வதும் சுகமடி..!

Monday, January 24, 2011

சுரமற்றோ.. கருவற்றோ...?

கவிதையோ? இசையோ?
சுரமற்றோ.. கருவற்றோ.. - நிதம் 
பிறந்து சிதைகிறது.! - நீ 
பிரிந்ததை நினைவூட்டி..!!