Tuesday, December 13, 2011
சுட்ட காதல்..!
Thursday, December 1, 2011
நானும் மழலையாய்..!
இதய அறைகளில் இன்னும் இருந்துகொண்டு..
அடிக்கடி புன்னகை.. அரும்பச் செய்கிறாய்..!
துடிக்கும் இதயத்தை கெட்டியாய் பிடித்து..
வலிக்கிறதா என்று மழலையாய் கேட்கிறாய்..!
உள்ளூரும் சுகமும்.. உயிர் கரையும் வலியும்..
தந்த நீ எதிரியா? நண்பியா?
இதுவரை விளங்காது.. நானும் மழலையாய்..!
Sunday, November 13, 2011
நெஞ்சக்கடல்..!
Thursday, August 25, 2011
வீழ்த்திப் பார்..!
Wednesday, July 27, 2011
இதயங்கொத்தி..!
அவள் வெறுத்த அத்தனையும்.. என்
அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!
நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..
"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!
உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?
உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!
அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!
இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!
வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..
ஈரமோ, உதிரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!
Saturday, July 23, 2011
தொலைந்து கொண்டே இருக்கிறேன்...!
தேடிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியாமலே..!
அருகிலிருந்து சிரிக்கிறாய் - அத்தனை முறையும்..!
ஏன் அடித்துச் சென்றாய்?
Friday, July 15, 2011
அழைக்கவா?
Tuesday, June 21, 2011
சதிகாரி நீ!
Thursday, June 9, 2011
நினைவழித்தல்..!
ஓர் அதீதம்!
ஏதோ பெண்ணில் வரும் மயக்க மென்றெண்ணி..
இன்னும் சில பெண்களிடம் பழகிப் பார்த்தேன்.!
பேசிய சில நிமிடங்களிலேயே புரிந்ததடி - இது
உன்னில் மட்டும் மயங்கும் ஓர் அதீதமென்று..!
Wednesday, June 8, 2011
தேடலின் விந்தை..!
உனைத் தேடுவதாலே தொலைகிறேன்..!
தொலைவதாலே எனைத் தேடுகிறேன்..!
தொலைத்தேனா..?! தொலைக்கப்பட்டேனா?!
கண்டதும்.. அல்லது கண்டெடுக்கப்பட்டதும்..
கண்டிப்பாக சொல்கிறேன்..!
கணிக்க.. கடினமாய்...
காலநிலையைப் போலவே கணிக்க..
கடினமாய் இருப்பதாலோ என்னவோ?!
இயற்கையோடு.. என்னவளையும்…
அதிகமாய் பிடிக்கிறது எனக்கு..!!
Tuesday, May 24, 2011
மீண்டும் வருமா?!
சில்லென நகர்கின்றன சில பொழுதுகள்..!
மீண்டும் வருமா என்ற ஏக்கத்தை தூவிச்சென்று..!
அடுத்து வரும் இன்னொரு வசந்தத்தையும்
அதனூடே தெளித்துச்செல்வதாலோ என்னவோ..
இயற்கையை இன்னுமதிகமாய் பிடிக்கிறது.. எனக்கு!
Thursday, May 12, 2011
அட! இது என்ன விந்தை?
அட! இது என்ன விந்தை?!
அத்தனையும் அழகாய்த் தெரிகிறதே?!
எல்லாவற்றிலும் என்னவள் பிம்பத்தை
செருகிச் சென்றது யாரோ?!