பனியருகே சூரியன்.. பனி உருகவில்லை..!
நிலவு உருகி நீராய் விழுந்தது பனியில்..!
இத்தனை அழகாய்..நித்தமும் புதிராய்..
நீயிருந்தால்... என்னவளே உனை
காதலிக்காமல் இருப்பது எப்படி?
பனியருகே சூரியன்.. பனி உருகவில்லை..!
நிலவு உருகி நீராய் விழுந்தது பனியில்..!
இத்தனை அழகாய்..நித்தமும் புதிராய்..
நீயிருந்தால்... என்னவளே உனை
காதலிக்காமல் இருப்பது எப்படி?
பார்ப்பேன் என எதிர்பார்க்கும் சில தினங்களில்...
பார்க்க இயலாது போகும் சில பொழுதுகளில்...
"வலியோ" எனும்படியாய் உணரும் சில நொடிகளில்...
தெயரியுதடி உனக்கும் எனக்குமான சிநேகம்..!!
"மலரிடை மலரொடு மலரென - முக
மலர்வுடன் மலருடை மலர்க்கரம் நீட்டினாள்"
"என்னவளை மலர்ப்பூங்காவில் சந்தித்தேன்"
என்பதை இப்படியும் சொல்லலாம்..!
தெளிந்தநன் மனம்..! தேறிய பெருந்தோள்கள்..!
கனிந்த உளம் கொள கள்ளமில்லா புன்னகை..!
துணிவினில் தோய்த்த துயரில்லா உள்ளம்..!
இத்தனையும் என்னகத்திருக்க எதற்கேனும்
ஏங்குவனோ கேளாய்என் கண்மணியே..!
வலி தந்ததோ..?! நிவாரணமானதோ?!
புரியாமலே உதிர்க்கப்படுகின்றன
கண்ணீர்துளிகள் சில... தனிமையில்..!
உதிர்ந்த துளிகளிலும் கூட...
உதிராமல் புன்னகைக்கும் அவளும்...
அவள் நினைவுகளும் வாழிய..!!கடும் பாதிப்பு..!! பின் புயல் கரைகடந்தது..!
நீ கடந்து சென்ற என் இதயத் தெருக்களில்
பெண்களுக்கு ஊரடங்கு உத்தரவு..!
இன்னொரு புயலுக்கு பயந்து...!!
நீரோடை தகித்ததோ?! நின்தேகம் தகித்ததோ?!
நாமிருவர் நீராடுகையில்....காதலால்!
காமத்தில் கொள்ள இது புறத்திணை அல்ல..!
அகத்தில் கொள்ளுங்கள் இது காதலால்..ஆதலால்..!!