Thursday, October 28, 2010

யார்மேல் பழியிடுவது?!

யாரைக்குறை சொல்லுவது?
ஆழமான உள்ளத்தை உள்வைத்து 
வஞ்சித்த வனப்பான கண்களையா?
சிரிக்க சிரிக்க விழுந்து காட்டி
விழ வைத்த கன்னக்குழிகளையா?
உன்னில் எனைத்தள்ளி வீழ்த்தியதற்கு
யார்மேல் பழியிடுவது?!

No comments: