Thursday, December 1, 2011

நானும் மழலையாய்..!

இதய அறைகளில் இன்னும் இருந்துகொண்டு..

அடிக்கடி புன்னகை.. அரும்பச் செய்கிறாய்..!

துடிக்கும் இதயத்தை கெட்டியாய் பிடித்து..

வலிக்கிறதா என்று மழலையாய் கேட்கிறாய்..!

உள்ளூரும் சுகமும்.. உயிர் கரையும் வலியும்..

தந்த நீ எதிரியா? நண்பியா? 

இதுவரை விளங்காது.. நானும் மழலையாய்..!

No comments: