சிலநொடிகள் பரபரப்பாய்..
சிநேகிதம் வெதுவெதுப்பாய்..
கரங்களில் மென்மையும்..
பார்வையில் எதிர்பார்ப்புமாய்..
கைகோர்த்தேன் ஒருநாள்..!
முகம்பார்க்க முயல்கையில்..
ஆர்வத்தின் அதீதத்தால்..
உணர்வினை உயிர்ப்பித்து..
கனவதைக் கலைத்தோடினாள்..!
கவிதையே! யாரடி நீ!
No comments:
Post a Comment