நீ வராத நாட்கள் அஸ்தமிப்பதில்லை
எச்சமாய் தொக்கி நிற்கின்றன..!
ஒளியாய் பட்டதெல்லாம் வெறுமையாய்..
இருளாய் பட்டதெல்லாம் பாலையாய்..
உணர்வுகள் அத்தனையும் தகிப்பும் தவிப்புமாய்..
வார்த்தைகளில் அகப்படாத வலியின் கொடூரமாய்..
வதந்தியிலாவது உன்னோடு சேர்த்து பேசப்பட மாட்டேனா? - என ஏக்கம்..!
எத்தனை பேர் சொன்னாலும் உணர்கையில் புதுமையாய்.. இந்த வலி!
No comments:
Post a Comment