Thursday, June 18, 2009

நீ வராத நாட்கள்..வருகின்றன வலியோடு!

நீ வராத நாட்கள் அஸ்தமிப்பதில்லை

எச்சமாய் தொக்கி நிற்கின்றன..!

ஒளியாய் பட்டதெல்லாம் வெறுமையாய்..

இருளாய் பட்டதெல்லாம் பாலையாய்..

உணர்வுகள் அத்தனையும் தகிப்பும் தவிப்புமாய்..

வார்த்தைகளில் அகப்படாத வலியின் கொடூரமாய்..

வதந்தியிலாவது உன்னோடு சேர்த்து பேசப்பட மாட்டேனா? - என ஏக்கம்..! 

எத்தனை பேர் சொன்னாலும் உணர்கையில் புதுமையாய்.. இந்த வலி!

No comments: