அவள் வெறுத்த அத்தனையும்.. என்
அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!
நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..
"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!
உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?
உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!
அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!
இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!
வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..
ஈரமோ, உதிரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!
No comments:
Post a Comment