
அலையாட புறஞ்சடையும் நீராட வழுவழுப்பும்
சலசலத்த வளையிருப்பும் நடனத்து தீண்டுதலும்
சதையுண்ணுஞ் சாதிக்கே நாண்சேர உணவாகி
கார் அகல பசலையுஞ் சுமக்குமெம் கெண்டைவிழிப்
பெண்டிரும் கயல்நிகரே..!!
பொருள்:
மீன்: அலைபோல ஆடும் வாலிருக்கும், நீரில் ஆடி வழுவழுக்கும், சலசலப்புடன் வளைகளில் இருக்கும், நாம் தொடும்பொழுது துள்ளி நடனமாடும், மாமிசம் உண்பவர்களுக்கு உணவாகும். கார்காலம் நீங்கி வாடை வரும்பொழுது ஒருவித பசலை போன்ற நோயுறும். பெண்ணின் கண் போன்றது மீன்.
பெண்: அலைபோல ஆடும் சடையுடனிருப்பாள், பூப்படைந்து பூப்பு நீராடுவாள், பருவத்தில் வழுவழுப்பான தேகம் கொண்ட அவளை தலைவன் தீண்டும் பொழுது, வெட்கத்தில் நடனமாய் நெளிவாள். சதையுண்ணும் - பெண்ணுடல் சுகிக்கும் இனமாகிய தலைவனுக்கு விருந்தாகுவாள். கூடல் கார்கால நிகழ்வு. கூடல் நீங்கி தலைவனை பிரிகையில் பிரிவுத்துயரால் நெற்றியில் பசலை நோய் வரும். மீன் போன்ற கண்ணுடையவள்.
No comments:
Post a Comment