கால்நூற்றாண்டுகள் கடந்திருந்தது..!
அவள் "இது வேண்டும்" என்றோ
"மகிழ்ந்தேன்" என்றோ கூறக் கேட்டதில்லை.!
இன்று முதன்முதலாய் அவளுக்கென்றொரு பரிசளித்தேன்..!
பெற்றுக்கொண்டாள்..!
பெருமிதமாய் பார்த்தாள்..!
கண்கள் மெல்ல ததும்பின..!
உதடுகள் கொஞ்சம் துடித்தன..!
நெஞ்சோடு அணைத்தாள்..!
நெற்றியில் முத்தமிட்டாள் உச்சி முகர்ந்து.!
நெடுநேரமாய் மீண்டும் மீண்டும் வந்து போயின அச்சிறு மணித்துளிகள்..!
அவள் "மகிழ்ந்தேன்" எனக் கூறும் வார்த்தைகளுக்கு முன்னே
மற்றெல்லா காதலும் எச்சமாய் பட்டது… தாயின் முன்னே..!
மழலையாய் மீண்டும் மனதுக்குள் உச்சரித்தேன் "அம்மா"..!
No comments:
Post a Comment