Thursday, September 3, 2009

அப்பாவாய் எனக்கு அகவை ஒன்று..!

முதன் முதலாய் பூமியில் தடம் பதித்திருந்தாள்..!

நானும் முதன் முதலாய் புதுப்பட்டம் பெற்றேன்..!

சிற்சில தடைகள் கடந்து வந்தாள்..!

சிறகுகள் கட்டிப்பறந்தேன் ஒவ்வொரு முறையும்..!

முதல் மொழி.. முதல் சைகை..முதல் பிறழல்..முதல் தவழல்..

அத்தனைக்கும் உள்ளூர மகிழ்ந்திருந்தேன்..! - இன்று

முதல் நடையோடு முதலாம் ஆண்டில் தடம்

பதிக்கும் எனதருமை மகளே...நீ வாழிய பல்லாண்டு..!!

No comments: