சாலையோரம் நடந்து செல்கையில்
ஆர்வமாய் விளையாடும் குழந்தைகள்..!
சட்டென ஏதோ சிறு கருத்து வேறுபாடு எழ
ஒவ்வொரு பிள்ளையும் ஒருவிதமாய்
சுவாரஸ்யமாய் விளக்கம் கொடுத்துக்கொண்டனர்..!
உண்மையறிந்தும் புன்னகைத்து நகர்ந்தேன்.
எனைக்கண்ட ஒரு குழந்தை ஒரு குறுஞ்சிரிப்பு செய்தான்..!
சுவாரஸ்யமாய் வாழ்க்கை..! அட இது சுகமடா..!
No comments:
Post a Comment